MENU
குர்ஆனை மனப்பாடம் செய்தல் மிகச் சிறந்த ஒரு இபாதத் ஆகும். அதுமட்டுமல்ல அது ஃபர்ல் கிபாயா (சமூகப் பொறுப்பு) கூட ஆகும். ஆகவே முஸ்லிம் சமூகத்தில் குர்ஆனை மனப்பாடம் செய்த ஒரு குழு எப்போதும் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்த ஒருவரும் இல்லாத நிலை ஏற்பட்டால் அந்த காலகட்டத்தின் அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளாகிவிடுவர். குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களுக்கு பல சிறப்புகள் ஹதீஸ்களில் வந்துள்ளன. அல்லாஹ்வின் நிழல் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் குர்ஆன் தாங்கிகள் அவனுடைய நிழலில் இருப்பார்கள்.
ஒருவன் குர்ஆனை ஓதி மனப்பாடம் செய்து அதிலுள்ள ஹலாலை ஹலாலாகவும் ஹராமை ஹராமாகவும் ஏற்றுக்கொண்டால் அல்லாஹ் அவனை சொர்க்கத்தில் புகுத்துவான் மேலும் நரகத்திற்கு உரியவர்களாகிய அவனுடைய பத்து உறவினர்களில் அவன் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளப்படும் (திர்மிதி).
குர்ஆனை ஒரு சிறிதளவும் மனப்பாடம் செய்யாதவன் வெறுமையான வீட்டைப் போன்றவன் (திர்மிதி).
குர்ஆனை கற்றவன் அதை மறந்து விடுவது பெரிய பாவமாகும். நபி (ஸல்) கூறினார்: “என் சமுதாயத்தின் பாவங்கள் எனக்கு காட்டப்பட்டன. ஆனால் புனித குர்ஆனிலிருந்து ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு ஸூராவையோ ஒரு ஆயத்தையோ அவன் மறப்பதை விட பெரிய வேறு எந்தப் பாவத்தையும் நான் காணவில்லை” (அபூதாவூத்).